Breaking News

இன்றும் நாளையும் சந்திக்கின்றது கூட்டமைப்பு.!

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா அல்­லது பிர­த­மரை காப்­பாற்­று­வதா என்­பது குறித்து தீர்­மானம் எடுக்க தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கூடி கலந்தாலோசி ப்பதாக ஆயத்தமாகியுள்ளது. 

தமிழ் மக்­களின் நிலைப்­பாடு, நல்­லி­ணக்கப் பயணம் என்­ப­வற்றை கரு த்தில் கொண்டே இறுதித் தீர்­மானம் எடுக்கவுள்ளதாகவும் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. 

பிர­த­ம­ருக்கு எதி­ரான கொண்­டு ­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை வெற்­றி­கொள்ள அல்­லது தோற்­க­டிக்க தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எடுக்கும் நிலைப்­பாடு மிகவும் முக்­கி­ய­மாக கரு­தப்­ப­டு­கின்ற நிலையில், நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து தீர்­மானம் எடுக்க தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் இன்று மாலை­யிலும் நாளையும் நடைபெறவுள்ளது. 

பிர­தான இரண்டு கட்­சி­களும் மஹிந்த அணி­யி­னரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்­டினை எதிர்­பார்த்து கருத்­துக்­களை முன்­வைத்து வரும் நிலையில் இது குறித்து இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜாவிடம் வினவிய போது அவர் கூறியதாவது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு குறி த்து பலர் கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். 

எனினும் பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா அல்­லது பிர­த­மரை காப்­பாற்­று­வதா என்ற எந்த தீர்­மா­னத்­தையும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எடுக்கவில்லை. இது குறித்து நாளை (இன்று 2ஆம் திகதி) மாலை எமது பார­ளு­மன்ற குழு­ கூடி ஆரா­ய­வுள்ளது. 

அதேபோல் நாளை மறு­தினம் (நாளை 3ஆம் திகதி) யும் பிரே­ரணை குறித்து கூட்­ட­மைப்­பினராகிய நாம் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம். எவ்­வாறு இருப்­பினும் தனிப்­பட்ட அர­சியல் நோக்­கங்­களை கொண்டு காய் நகர்த்­தல்­களை எவரும் முன்­னெ­டுக்கும் நோக்­கத்தில் செயற்­பட்டால் கூட்­ட­மைப்பு யாரையும் ஆத­ரிக்­கப்­போ­வ­தில்லை. 

எனினும் எமது தமிழ் மக்­களின் நிலைப்­பா­டுகள், எமது மக்­களின் பாது­காப்பு மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் என்­ப­வற்றை கருத்தில் கொண்டே நாம் எந்தத் தீர்­மா­ன­மேனும் எடுக்க வேண்டும்.  இது வரையில் நாம் எவ் வித முடி­வு­க­ளையும் எடுக்­க­வில்லை. ஏனைய கட்­சி­க­ளுடன் பேச்­சு ­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லையெனத் தெரிவித்துள்ளாா்.