Breaking News

உடைந்தது தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு! சிவகரன் அணி விலகல் தெரிவிப்பு !

தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கொள்கை, சனநாயகத் தன்மை இல் லாத காரணத்திலேயே அக்கட்சியின் அக்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சன நாயக தமிழரசுக்கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார். 

சனநாயக தமிழரசுக்கட்சியின் பொது ச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரி வித்த ஊடக அறிக்கையிலேயே இவ் வாறு விவரித்துள்ளார். இவ் அறி க்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது, 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கையில்லை, சனநாயகத் தன்மை இல்லை, சர்வாதிகரம் காணப்படு கின்றது. எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அரசாங்கத்துடன் சரணகதி அரசியல் நடாத்துகிறார்கள். 

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனும் அடுக்கடுக்கான பல் வேறு விதமான குற்றச்சாட்டுடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர் விடுதலை கூட்டணி யின் உதய சூரியன் சின்னத்தில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பந்தத்தின் அடி ப்படையில் போட்டியிட்டோம். 

உள்ளுராட்சி மன்றங்களில் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லை எனும் தீர் மானம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு மாறாக வவுனியாவில் ஈ.பி.ஆர். எல்.எப் நடந்து கொண்டது அரசியல் அனாகரிகம். கொள்கையில்லாமல் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைக்கிறது என குற்றஞ்சாட்டி விட்டு அதே வேலையை எம்மால் செய்ய முடியுமா? 

 பதவி பெறுவது தான் முக்கியம் என்றால் எதற்காக இந்த கூட்டில் நாம் தொடர வேண்டும். கொள்கையில்லாத தமிழ் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தும் நோக்கி லான கூட்டில் நாம் தொடர விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். 

வவுனியாவில் பொது எதிரியாகிய தேசிய கட்சிகளுடன் கை கோர்த்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம்” என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.