Breaking News

அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை ஏற்க முடியாத சரத் பொன்சேகா !

அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற் காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்களின் தேவைக்கு ஏற்ப அரசாங்க த்தில் சில மாற்றங்களை செய்து விட்டு மக்களிடம் செல்ல வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் ஐக் கிய தேசிய கட்சியான எமக்கு வருத் தப்பட வேண்டி ஏற்படுமெனத் தெரி வித்துள்ளாா்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்க ளும் அமைச்சரவைக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் கெட்ட நேரமாக இருந் ததாக அமைச்சர் கூறியுள்ளார். அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந் தனுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லையெனப் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளாா்.