சூப்பில் சிறுநீர் கழித்த ஹோட்டல் முதலாளி! (காணொளி)
சீனாவில் பெரும்பாலான உணவகங்களில் சூப் மிகவும் பிரபலம். அதுவும் மாட்டிறைச்சியால் செய்யப்படும் சூப்பை சீனா மக்கள் பெரும்பாலும் விரும்பி உண்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் பிரதான சா லையில் உள்ள டாங்கிபை என்ற உணவகத்தில் தயாரிக்கப்படும் சூப் பை குடிப்பதற்காக தினமும் ஆயிர க்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.
இதனால் எரிச்சல் அடைந்த பக்கத்து ஹோட்டல் முதலாளி அவரை பழிவாங்க வேண்டுமென அவரது ஹோட்ட லுக்கு மக்கள் யாரும் போகக் கூடாது என்பதற்காகவும் கடந்த 3 ஆம் திகதி யாருக்கும் தெரியாமல் அவர்களது உணவகத்திற்குள் சென்று அவர்கள் தயா ரிக்கும் உணவில் மிகவும் பிரபலமான சூப்பில் அதிகளவு உப்பை கலந்து ள்ளார்.
இருப்பினும் ஆத்திரம் தீராத அவர் சூப்பில் சிறு நீரும் கழித்துள்ளார்.
மறுநாள் காலை சூப்பில் இருந்து மோசமான மணம் வந்ததால் சூப்பை கீழே ஊற்றி விட்டதுடன் கடைக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
இது தொடர்பான காட்சி கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால் தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தளத்தில் பிரசுரமாக பாய்ந்து கொண்டிருக்கின்றது.