Breaking News

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் சொந்த நிலத்தில் இருந்து வெறியேறக் கூடாது – சுரேஸ்.!

நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும், இரணைதீவு மக்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லையென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி யின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விவரித்துள்ளாா்.

எதிர்காலத்தில் அச்சுறுத்தல் விடுக்க ப்பட்டாலும் இரணைதீவு மக்கள் தமது சொந்த காணிகளில் இருந்து வெளியேற கூடாதென அவர் வலி யுறுத்தியுள்ளார். நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது, இலங்கை படை யினரால் சுவீகரிக்கப்பட்ட காணி களை விடுவிக்குமாறு கோரி வட மாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கிளிநொச்சி – இரணைதீவில் பொதுமக்களால் முன்னெ டுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் தீர் வின்றி தொடர்கின்றது. எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இணைதீவு மக் கள் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை இரணைத்தீவுக்கு சென்று அங் தங்கி யிருந்து ஐந்தாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரே மச்சந்திரன் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இரணைதீவிற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டுமெனவும் இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ள இரணைதீவு மக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான அமை ப்பினரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த முருகேசு சந்திரகுமார் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமக்கான தீர்வு இழுத்தடிப்பு செய்யப்படு மானால், தமது இருப்பிடங்களுக்கு தாமாக செல்வதே தங்களது முடிவு என தெரிவித்துள்ளனர்.