Breaking News

மகிந்தவிற்கு ஹெலிக்கொப்டர் அனுப்பியது யார்?

2015 ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடை ந்த பின்னர் அவர் அம்பாந்தோட்டைக்கு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹெலிக்கொப்டர் ஏற்பாடு செய்து கொடுத்தார் என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருப்பது உண்மையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள் ளதாக கொழும்பு டெலிகிராவ் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு டெலி கிராவ் மேலும் தெரிவித்துள்ளதா வது:

தேர்தலில் தோற்ற பின்னர் அம்பாந் தோட்டைக்குச் செல்வதற்கு மகிந்த ராஜபக்சவே ஹெலிக்கொப்டரை கோரிய தாக அவரின் குடும்பத்தவர்களிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

சிறிசேன 9 ம் திகதி மாலையே சத்தியப்பிரமாணம் செய்தார் அதுவரை மகிந்த ராஜபக்சவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக காணப்பட்டார், என தெரிவித்துள்ள ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள் வழமை போன்று அவர் தனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்த திச விமலசேனவிடம் ஹெலிக் கொப்டரிற்கு உத்தரவிட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.