Breaking News

"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாக உள்ளது"

பிணைமுறி விவகாரத்துடன் சம்பந் தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங் குவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி விப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை யினை அவமதிப்பதாகவே அமைவ தாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளாா். 

மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் பிணைமுறி விவகார மோசடியில் தொடர்புப்பட்ட அரசி யல்வாதிகள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குவது இலகுவான விடயமல்ல என்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி குறிப்பிடுவது அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத் தினை அவமதிப்பதாகவே அமைகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டதன் பின்னர் அரசியல் தலைவர்கள். இந்த விசேட அதிகாரத்தினை ஒரு கேடய மாகவே பயன்படுத்தினார்கள்.

ஆனால் தேசிய அரசாங்கத்தில் இப்பதவி 1972 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் காணப்பட்ட ஜனாதிபதியின் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்துச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டாலும்.

அந்த அதிகாரம் நடைமுறையில் இருக்கும் வரை அதனை மதித்து செயற்படு த்த வேண்டும். பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழு வழங்கிய அறிக்கையினை பாராளுமன்றத்திற்கு முழுமையாக சமர்ப்பிப்பதில் அரசாங்கம் தொடர்ந்து கால தாமதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிணை முறி விவகாரத்தில் தனது பொறுப்புக்களை முழுமையாக நிறை வேற்றி விட்டேன் என ஜனாதிபதி ஒரு போதும் குறிப்பிட முடியாது. ஏனெனில் நாட்டு தலைவர் என்ற ரீதியில் பிணைமுறி விவகாரத்திற்கு அவரே முழு மையான பொறுப்புக்களையும் ஏற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.