Breaking News

அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபடுங்கள் - இஷாக் ரஹ்மான்.!

இலஞ்சம், ஊழல்களை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பாராளு மன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி ஊழலில் இருந்து முதலில் விடு பட வேண்டுமென அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்துள்ளாா். 

பாராளுமன்றத்தில் இன்று இலஞ்சம் திருத்த சட்ட மூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா். 

மேலும் தெரிவிக்கையில்.....,

இலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதலில் அர சியல்வாதிகள் ஊழலில் இருந்து வெளியேற வேண்டும். 

அரசியல்வாதிகளிடையே ஒழுக்கமில்லாத காரணத்தினாலேயே நாடு இன் னம் முன்னேற்றம் காணாமல் உள்ளது. மலேசியாவில் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்ட காரணத்தினால் முன்னாள் பிரதமரை சிறையில் அடைத்துள்ளனர். 

மஹதீர் மொஹமட் அதற்கான ஏற்பாடுகளை அச்சமில்லாமல் செய்துள்ளார். இந்நிலையில் இலங்கை பெளத்த நாடு என்ற வகையில் பெளத்த தலைவர் களே ஆட்சி அமைத்தனா். எனவே நீதியான முறையில் ஊழல் மோசடி இல் லாத நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.