Breaking News

அர­சி­யல்வா­தி­க­ளுக்கு 30 துப்­பாக்­கிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக - பாதுகாப்பு அமைச்சு.!

பாது­காப்பு அமைச்­சினால் கடந்த 2017 ஆம் ஆண்டில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு என 30 துப்­பாக்­கிகள் புதி­தாக விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக பாது­காப்பு அமைச் சின் புள்ளி விவ­ரங்கள் வெளியாகியுள்ளன. 

அந்த ஆண்டில் முதல் காலாண்டில் 14 துப்­பாக்­கி­களும் இரண்டாம் காலாண் டில் 5 துப்­பாக்­கி­களும் மூன்றாம் காலா ண்டில் 9 துப்­பா­க்­கி­களும் இறுதிக் கா லாண்டில் 2 துப்­பா­க்­கி­களும் இவ்­வாறு அரசி­யல்­வா­தி­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப் ­பட்­டுள்­ள­தாக புள்ளி விபரங்கள் ஊடாக வெளிவந்துள்ளன. 

கடந்த வருடம் 223 அர­சி­யல்­வா­தி­களின் துப்­பாக்­கி­க­ளுக்­கான அனு­மதிப் பத்­தி­ரங்களைப் புதுப்­பிக்க வேண்டியிருந்த போதிலும் அதில் 71 பேர் மட்­டுமே தமது அனு­மதிப் பத்­தி­ரங்களை புதுப்­பித்­துள்­ள­தாகவும் பாது­காப்பு அமைச்சின் தக­வல்கள் கசிந்துள்ளன. 

இத­னை­விட கடந்த வரு­டத்தில் அர­சி­யல்­வா­தி­களைத் தவிர உயிர், சொத்து பாது­காப்­புக்கு என 0.38 மற்றும் 9 மில்லி மீற்றர் ரக துப்­பாக்­கிகள் 78 புதி­தாக விநியோ­கிக்­கப்பட்­டுள்­ளன. இதனைவிட கடந்த ஆண்டு 1450 வாயு துப்பாக்கி களும் பாதுகாப்பு அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.