Breaking News

லிந்துல மட்டுக்கலை பகுதியில் கத்திக் குத்து இருவர் படுகாயம், நால்வர் கைது.!

லிந்துல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மட்டுக்கலை பகுதியில் கத்திக்குத்து சம்ப வத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் நால்வர் கைதாகியுள்ளனா். 

லிந்துல மட்டுக்கலை தோட்டத்தின் லெந்தோமஸ் பிரிவில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இரு வர் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 ஒருவர் நேற்று அதிகாலை மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவ ட்ட வைத்தியசாலைக்கு அனுமதிக்க ப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

குறித்த கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் லிந்துல பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு நடாத்தி வரு வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.