Breaking News

வடமாகாண சபையின் விசேட அமர்வு ; விக்கி பங்கேற்கவில்லை வெளிநடப்பு.!

மாகாண அமைச்சரவை தொடர்பில் விவாதிப்பதற்காக வட மாகாண சபை யின் விசேட அமர்வு கைதடியிலுள்ள பேரவைக் கட்டிடத் தொகுதியில் இன்று நடை பெற்று வருகின்றது. 

இன்றைய அமர்வில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதாக வட க்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவைத் தலைவ ருக்குத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, வட மாகாண சபையின் சில அமைச்சர்களும் இன்றைய அமர் வில் கலந்து கொள்ளவில்லையெ ன்று எமது செய்தியாளர் குறிப்பிட் டார். மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், விவசாயத்துறை அமைச்சர் சிவனேசன், சிவாஜிலிங்கம் ஆகியோர் வருகை தரவில்லையென அவைத் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர். 

வடமாகாண அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சிக்கலை விவாதிக்கும் வடமாகாண சபையினுடைய 121 ஆவது அமர்வு விசேட அமர்வாக இடம் பெற்று வருகின்றது. இந்த அமர்வில் ஆரம்பத்தில் 22 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர். ரெலோ உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், சுகாதார அமைச்சர் குணசீலன், குகதாஸ், புவனேஸ்வரன் ஆகியோர் வெளிநடப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இவ் விவாதத்தால் எவ்வித நன்மையும் இல்லை. கருத்து மோதல்களுக்கே இது வழிவகுக்கும் எனத் தெரிவித்து இவர்கள் வெளிநடப்பிலீடுபட்டமை குறிப் பிடத்தக்கது.