Breaking News

உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு.!

வவுனியா கனகராயன்குளம் காட்டுப் பகுதியில் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் யானையின் சடலத்தை கனகராயன்குளம் பொலிஸார் மீட்டெடுத் துள்ளனர். 

கனகராயன்குளம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் சென்றி ருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையி லிருந்த யானையின் சடலத்தை கண் டுள்ளனர். 

இதையடுத்து கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள துடன் பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்று இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த யானை இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

உயிரிழந்த யானையின் சில பாகங்கள் உடற்கூராய்வு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.