உண்மையைக் கூறுவதால் நாங்கள் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம் - சி.வி.
தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதி பலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேசமுன் வாருங்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரி வித்துள்ளார்.
பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மை யைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம். அந்த நாள் இன்றுவந்திடாதோ என்று விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிடமுடியாது.
புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களைவிட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.
ஆகவே விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும்.
தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவரா கக் கணிக்கக்கூடாது. விஜயகலா சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.








