Breaking News

முல்லைத்தீவில் சிங்களக்குடியேற்றமா? தடுத்து நிறுத்துவேன் - ஜனாதிபதி

மகாவலி அதிகார சபை முல்லைத்தீவு மாவட்டத்தில் அடாத்தாக குடியேறி யுள்ள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டதா? என்ற விடயம் வெளியாகவில்லை. 

அவ்வாறு நடந்திருந்தால் அதனை நான் தடுத்து நிறுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனா தெரிவித்துள்ளார். மயிலிட்டி துறைமுகம் அபிவி ருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. 

அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழரசுக் கட் சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நானும் எதிர்க்கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனும் ஜனா திபதியான உங்களை சந்தித்தபோது மகாவலியூடாக தண்ணீரைக் கொண்டு வருவதற்கு முன்னர் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றாதீர்கள் என கேட்டிருந்தோம். 

எங்களுடைய மக்களுக்கு சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரை வார்க்காதீர்கள் என கேட்டோம். இன்று எங்களுடைய மண்ணில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டுள் ளது. 

அதனை நீங்கள் பொறுப்பாக இருக்கும் மகாவலி அதிகாரசபை வழங்கியுள் ளது. நாங்கள் இப்போதும் கேட்கிறோம் எங்கள் மக்களுக்குச் சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரை வார்க்காதீர்கள் என உரையாற்றி இருந் தார். 

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகாவலி அதிகாரசபை அவ்வாறு காணிகளுக்கான உத்தரவு பத்திரங்களை வழங்கியதாக நான் அறிய வில்லை. அப்படி நடந்திருந்தால் அதனை நான் உடனடியாக தடுத்து நிறுத்து வேன். 

இவ்வாறான பிரச்சினைகள் குறித்து நாங்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் நடந்து கொண்டிருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் இவ்வாறன பிரச்சினை களில் மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்படுவோமெனத் தெரிவித்துள்ளாா்.