மீண்டும் யுத்தத்திற்கு இடமில்லை என்கிறாா் - ரெஜினோல்ட் குரே
வடக்கில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டாலும் மீண்டும் யுத்தம் நடைபெறுவதற்கு இடமளிப்பதில்லையென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பெரிய மழை பெய்து முடிந்தவுடன் நிலத்தில் ஈரம் இருப்பது போன்று வட மாகாணத்தில் நடைபெற்ற முப்ப தாண்டு யுத்தத்தின் பின்னர் ஓரிரு ஆயுதங்கள் கண்டெடுக்கப்படலாம். அது யுத்தத்தின் மறு ஆரம்பமல்ல எனத் தெரிவித்துள்ளாா்.