Breaking News

நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் பயணிப்போம் - ஜனாதிபதி மைத்திரி.!

நெல்சன் மண்டேலா போன்ற தலை சிறந்த தலைவர்கள் சென்ற பாதையில் நாமும் பயணிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள் ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக நடைபெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்கு பற்றலுடன் நேற்று நியூயோர்க் நக ரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்ப மாகிய இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரி வித்துள்ளாா்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டை ஐ.நா. சபை நடத்த தீர்மானித்த்தையிட்டு அதன் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பணிப்பாளர் சபைக்கு இலங்கை அரசினதும் மக்களினதும் மதிப்புக்குரிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்சன் மண்டேலா போன்ற சிரேஷ்ட மனிதநேயம் மிக்க, உலகிற்கு நல்லி ணக்கத்தை ஏற்படுத்த முயன்ற தலைவர்கள், உலகின் மனித சமுதாயத்திற்கு தலைசிறந்த பாதையில் செல்வதற்கு வழிகாட்டியாக இருந்திருக்கறார்கள்.

அவரைப் பற்றி கதைப்பதற்கு காரணம், அவ்வாறான தலைவர்கள் இன்று இந்த உலகில் இல்லாமையே ஆகும். நெல்சன் மண்டேலா இந்த உலகிற்கு அதிகா ரங்களை மட்டுப்படுத்துதல் பற்றியும், அதிகாரங்களை துறப்பது தொடர்பிலும், மனித நேயத்துடன் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதற்கும் முன்தார ணமாக திகழ்ந்தவா் என்பது யாவரும் அறிந்த உண்மை.

இன்றைய இந்த உலகம் நெல்சன் மண்டேலா சென்ற பாதையில் செல்வதாக இல்லை. அதனாலேயே மண்டேலா அவர்களின் அந்தப் பயணத்தைப் பற்றி உலகிற்கு ஞாபகமூட்ட வேண்டிய தேவையுள்ளது.

ன்று இந்த உலகில் வாழும் இனங்கள் மத்தியிலும் அரச தலைவர்கள் மத்தி யிலும் உலகிற்கு அரசியல் வழிகாட்டிகளாகயிருக்கும் வழிகாட்டிகள் மத்தி யிலும், நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையின் குணாதிசயங்கள் எந்தள வுக்கு இருக்கின்றது கேள்வி எழுகின்றது.

ஆகையினால் சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான ஒற் றுமை, மனிதநேயம் மிக்க தலைசிறந்த ஒரு பயணம் ஆகியவை பற்றி இந்த உலகிற்கு எடுத்துரைத்த, அவ்வாறான உன்னதமான தலைவர்களின் சுய சரி தங்களை இன்றை உலகத் தலைவர்கள் கற்றறிய வேண்டுமென்பதே என் னுடைய கருத்தாகும்.

அன்னாரது வாழ்க்கையில் உள்வாங்கப்பட்டிருந்த மனிதர்கள் மீதான அன்பு, அதிகாரம் மீது பற்றுக் கொண்டிராத தன்மை ஆகிய தலைமைத்துவ பண்புக ளுக்காக இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் நன்மதிப்பையும் கெளர வத்தையும் மண்டேலாவுக்கு தெரிவிப்பதுடன், நெல்சன் மண்டேலா போன்ற தலைசிறந்த தலைவர்கள் சென்ற பாதையில் நாமும் பயணிப்போம் எனத் தெரிவித்துள்ளாா்.