Breaking News

அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் கவனம் செலுத்துவதாக - சட்டமா அதிபர்

அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதமிருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டா­தமை மற்றும் கால தாம­தங்கள் குறித்து நான் உட­ன­டி­யாக கவனம் செலுத்­து­கின்றேன் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

உண்­ணா­ வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களின் விடயம் குறித்து இன் னும் இரண்டு அல்­லது மூன்று தினங்­க­ளுக்குள் நட­வ­டிக்கை எடுக்­கின் றேன். யுத்த கால­கட்­டத்தில் கைது­ செய்­யப்­பட்ட அர­சியல் கைதிகள் பலர் பொது மன்­னிப்பின் அடிப்­ப­டை யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

எனினும் இப்­போதும் தடுத்­து ­வைக்­கப்­பட்­டுள்ள நபர்கள் பாரிய குற்­றங்­களின் பெயரில் கைது ­செய்­யப்­பட்­ட­வர்கள். அவர்­களை விடு­தலை செய்­வது கடி­ன­மா­ன விடயம் எனவும் தெரிவித்துள்ளாா்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று அலரி மாளிகை யில் நடைபெற்ற சந்திப்பின்போதே சட்டமா அதிபர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

 மேலும் இச் சந்திப்பின்போது சுமந்­திரன் எம்.பி.யிடம் இருந்த அர­சியல் கைதி­களின் விப­ரங்­களை பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.