Breaking News

அனுராதபுர கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும்படி அருட்தந்தை! (காணொளி)

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி கள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் வேண்டுகை விடுத்துள்ளாா்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று வியா ழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித் துள்ளாா்.

 மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பிரஜைகள் குழுவின் செயல் திட்ட நிகழ்வு காரணமாக நேற்று புதன் கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தோம்.

தமது விடுதலையை முன் வைத்து அவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் சென்ற பொது அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து எங்களை வந்து சந்தித்தார்கள். அவர்களுடைய உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றதை நாங்கள் அவதானித்தோம்.

சக்தியை இழந்து மிகவும் வேதனைக்கு உள்ளானவர்களாக காணப்பட்டனர். தமது விடுதலைக்கு முன் நின்று உழைக்குமாறும் எங்களிடத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தாங்கள் சுமார் 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், தற்போது பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களை வந்து சந்தித்துள்ளதாகவும்  தாங் கள் எவ்வித விசாரனைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் இதுவரை காலமும் தமக்கு எவ்வித விமோசனமும் கிடைக்க வில்லையென தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

சுகவீனம் அடைந்துள்ள போதும் அவர்களுக்கு கை விலங்கிடப்பட்டே வைத் திய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் துயரத்துடன் எங்களிடத் தில் தெரிவித்துள்ளனர்.

தங்களை விடுதலை செய்யாது விட்டாலும்,தங்களை புனர்வாழ்வுக்காவது அனுப்பும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். 12 அரசியல் கைதிகள் அங்கே இருக்கின்றார்கள். அவர்களில் 3 பேர் மிகவும் சுகவீனமடைந்து உள்ளனர். அவர்களுக்கான நடவடிக்கைகள் எதையும் நீதிமன்றத்தின் ஊடாகவும் எடுக் கப்படவில்லை.

சுமார் 102 நாட்களுக்கு அவர்களின் விசாரனைகளை தள்ளி வைத்துள்ளார்கள். அவர்களின் விடுதலைக்காக போராடுவதற்காகவோ அல்லது கேட்பதற்கா கவோ யாரும் இல்லை என்ற ஆதங்கம் அவர்களிடத்தில் காணப்பட்டுள்ளது.

இவர்களின் விடுதலைக்காக அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டு மென அனைவரிடமும் மன்னார் பிரஜைகள் குழுவின் சார்பாக வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.

குறிப்பாக அரசியல் பிரமுகர்களை அனுகி அரசியல் கைதிகளின் விடுதலைக் காக இந்த நாட்டின் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்க நாங்கள் தீர் மானித்துள்ளோம்.

இவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வு வழங்க வேண்டும் என அரசினையும் அதனை சார்ந்துள்ளோரிடமும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.