Breaking News

அபிவிருத்தி நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய உடன்படிக்கை கைச்சாத்து.!

நாட்டின் சமூக அபிவிருத்தியில் நேரடி தாக்கங்களை செலுத்தும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அபி விருத்தி நிதியத்துடனான புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் ஜனாதி பதி மைத்ரிபால சிறிசேன அமெரிக்க விஜயத்தின் போது நேற்று பிற்பகல் நியூ யோர்க் நகரில் நடைபெற்றுள்ளது.

இதற்கமைய, சமூக முன்னேற்றத் திற்கான நிதியம் மற்றும் சமூக தொழில் முயற்சியாண்மைக்கான நிதியம் ஆகியவற்றை தாபித்தலுடன் தொடர்பான புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவி ருத்தி நிதியத்தின் இலங்கைக்கான செயற் திட்டங்களில் தனியார் துறை யினரின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ள இதனூடாக எதிர்பார்க்கப்படுகின் றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவின் பங்குபற்றலில் இவ் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் இலங் கைக்கான நிரந்தர பிரதிநிதி கலாநிதி ரொஹான் பெரேரா மற்றும் பிரதி நிரந்தர பிரதிநிதி சத்யா ரொட்ரிகோ ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ள னா்.