Breaking News

சட்டமா அதிபர் திணைக்களம் சபாநாயகருக்கு விடுத்துள்ள அறிவிப்பு.!

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டரீதியென சட்டமா அதிபர் திணைக்களம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க நேற்றைய தினம் (30.10.2018) தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மின்னஞ்சல் ஊடாக குறித்த விடயம் சபாநாயக ருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அமை ச்சரவைத் தீர்மானங்களை அறிவிக் கும் நேற்றைய ஊடகச் சந்திப்பில் இத னைத் தெரிவித்துள்ள அவர், சபாநாயகரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.