Breaking News

மைத்திரியின் தீர்வே எமது தீர்வு - சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி

ஜனாதிபதியின் அதிரடி முடிவினால் அதிருப்தியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட் சியிலுள்ள பலர் சுயாதீனமாக செயற்படப்போவதாக வெளியான தகவல்கள் உண்மையானவை அல்ல என சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரி வித்துள்ளது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந் துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடை பெற்ற விஷேட ஊடகவியலாளரின் சந்திப்பில் சுதந்திர கட்சியின் இளை ஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித் துள்ளாா்.

இங்கு கருத்து தெரிவித்த சாந்த பண்டார, “இலங்கையின் அரசியலமைப்பிற்கு அமைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக் கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சுதந்திர கட்சியின ரும் பிரதமராக ஏற்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்திருக்கும் முடிவு அரசியலமைப்பை மீறும் வகையில் அமையவில்லை பலதரப்பட்ட நிபுணர்களின் ஆலோசனை களைப் பெற்றே நாட்டை எண்ணி ஜனாதிபதி இம் முடிவை ஜனாதிபதி எடுத் துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாட் டின் நெருக்கடி நிலைமையை போக்குவதற்கு மைத்திரிபால சிறசேன எவ் வாறு பொது வேட்பாளராக களமிறங்கினாரோ அவ்வாறே தற்போதும் செயற் பட்டுள்ளார்.

அத்துடன் நாளை (இன்று) நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத் திய செயற்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான தீர்மானங் கள் எடுக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.