Breaking News

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி முடக்க விவாதம் நாளை பாராளுமன்றில் நடைபெறும்.!

நாளை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளு மன்றம் கூடவுள்ள நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்கக் கோரும் பிரேரணை மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங் குவதை தடுக்கக்கோரும் பிரேர ணையை ஐக்கிய தேசிய முன்ன ணியை சேர்ந்த நவீன் திஸாநாயக்க, ரவி கருணா நாயக்க, நாலக்க பிரசாத் கொலன்னே, கவிந்த கேஷான் ஜெய வர்த்தன, ஹெக்டர் அப்புகாமி, சதுர சந்தீப சேனாரத்ன ஆகியோர் சபாநாய கருக்கு முன்வைத்துள்ளனா்.

இந் நிலையிலேயே பாராளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில் சபாநாயகர் அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக் கக்கோரும் பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இவ் விவாதத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாளைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.