Breaking News

சந்திரிகா தலைமையில் புதிய கட்சியா? விரக்தியில் மஹிந்த-மைத்திரி??

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க புதிய தேசி யக் கட்சி ஒன்றை உருவாக்கும் பணியில் செயற்பட ஆயத்தமாகியுள்ளதாக  தென்னிலங்கைச் செய்திகள் விவரித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத் தின் மத்தியில் சந்திரிகா இந்த அதிரடி நட வடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் இக் கட்சி உருவாக்கத்துக்காக  முன்னணி விளையாட்டு வீரர்கள் சிலருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பிலிருந்து வெளியேறி நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேன தெரிவாகியதன் பின்னர் சிறிலங்கா சுதந் திரக் கட்சியை அவர் தலைமையில் சீரமைப்பதற்கு சந்திரிகா ஒத்தாசை புரிந் துள்ளார்.

எனினும் தற்போது மைத்திரிபால சிறிசேன மீண்டும் மஹிந்த ராஜாக்‌ஷ அணி யினருடன் கைகோர்த்துள்ள நிலையில் சந்திரிகாவின் பரம்பரைக் கட்சி தொடர்பில் அவர் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் நாள் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நிய மிக்கப்பட்டதன் பின்னர் சந்திரிகா பொது வெளியில் எதுவுமே கூறாது இருந் துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தினத்தில் கலந்துகொண்டுள்ளார் சந்திரிகா. இதன் பின்னணியில் தான் புதிய தேசியக்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் முயற்சித்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.