Breaking News

எக் காரணத்தினாலும் கட்சியிலிருந்து வெளியேறாதீர்கள் - மைத்திரி.!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந் துரையாடியுள்ளாா்.

இச் சந்திப்பானது நேற்றைய தினம் ஜனாதிபதி செயலாகத்தில் நடை பெற் றுள்ளது.  நாட்டில் ஏற்பட்டுள்ள சிக் கல் நிலை தொடர்பாக கலந்துரையா டப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கும் நிதியை தடுக்கும் வகையி லான பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தால் என்ன செய்வது என்பது தொடர்பாகவும் ஆராயப் பட்டுள்ளது.

இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அதிருப்தியாளர்கள் சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடையக் கூடாது என்பது தொடர்பில் எடுத்துரைத்ததுடன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எக் காரணம் கொண்டும் கட்சியிலி ருந்து வெளியேற வேண்டாமெனத் தெரிவித்துள்ளாா்.