Breaking News

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த மைத்திரி.!

பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலுக்கு அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளையும் கலந்து கொள்ளு மாறு பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர வேண் டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கலந்துரை யாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கலந்துரையாடல் நவம்பர் 5 ஆம் திகதி நடத்தப் பட திட்டமிடப்பட்டாலும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பிற்போடப் பட்டுள்ளது.