Breaking News

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக திடீரென்று பழுதாகிய இராணுவ வாகனம்!

தேசிய மாவீரர் நாள் அனுட்டிப்பு யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில் லத்தின் முன்பாகவும் நினைவேந்தப்படவுள்ள நிலையில், துயிலுமில்லத்தின் முன்பாக சிறிலங்கா இராணுவத்தினரின் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டுள் ளன.

துயிலுமில்லத்தின் முன்பாகவுள்ள காணி யொன்றில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு கள் அனுட்டிக்கப்படுவதற்காக தயாராகி யுள்ள நிலையில் இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் சற்று முன்னர் இராணுவத்தினரின் கவச வாகனம் ஒன்று துயிலுமில்லத்தின் முன்பாக நின்று பழுதடைந்து இயங்க மறுத்துள்ளது.

இதேவேளை ஏற்கனவே திட்டமிட்டதன்படி இன்று மாலை மாவீரர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றப்படும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.