Breaking News

பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கு : 7 நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணை.!

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள்  நடைபெறவுள்ளன.

இதனை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட எழுபோ் கொண்ட நீதி யரசர்கள் குழு முன்னிலையில் இன்று முதல் விசாரணைகள் காலை ஆரம்பமாகியுள்ளன.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பூரண நீதியரசர்கள் குழு ஒன்றின் முன் னிலையில் இவ் வழக்குகளை விசாரிக்க வேண்டுமென பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான இடையீட்டு மனுதாரர்கள் முன்வைத்த நகர்த் தல் பத்திரம் மீது அவதானம் செலுத்தி பிரதம நீதியரசர் எடுத்த தீர்மானத்தின் படியே இன்று ஏழு பேர் கொண்ட நீதியர்சர்கள் முன் விசாரணைகள் நடை பெறவுள்ளன.

அதன்படி பிரதம நீதியரசர் நலின் பெரேராவின் கீழ் பிரியந்த ஜயவர்தன, பிர சன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் இவ் வழக்கை இன்று விசாரணை செய்யவுள்ளனர்.

 எஸ்.சி.எப்.ஆர். 351/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 352/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 353/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 354/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 355/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 356/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 358/ 201, எஸ்.சி.எப்.ஆர். 359/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 360/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 361/ 2018

ஆகிய அடிப்படை உரிமை மீறல்கள் மனு தொடர்பிலேயே இவ்விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இடையீட்டு மனுதாரர்களான பேராசிரியர் ஜீ எல். பீரிஸ், கலாநிதி சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த உள்ளிட்ட ஐவரின் இடையீட்டு மனுக் களும் ஆராய்ப்படவுள்ளன.

 அத்துடன் இந்த விவகாரத்தில் ஏற்கனவே கடந்த 19 ஆம் திகதி அடிப்படை ஆட்சேபனக்களும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளை 5 ஆம் திகதியும், நாளை மறுதினம் 6 ஆம் திகதிகளிலும் விசாரணைகளை முன் னெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து கடந்த 9 ஆம் திகதி வெளியிட்ட 2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை இடைக்கால தடையும் விதித்துள்ளது.