Breaking News

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு. (காணொளி)

பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடி யுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அறிவித்ததுடன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென தெரிவிக்கப்பட்டுள் ளது.

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விவாதம் தற்போது பாரா ளுமன்றில் நடைபெற்றவாறு உள் ளது.

இது தொடர்பில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய லக்ஸ்மன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து சுதந்திரக் கட்சி நீங்கியதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க கூடா தென பாராளுமன்றில் தெரிவித்துள்ளாா்.

சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டி வந்தால் அல்லது வகித்தால் அவர்கள் எவ்வாறு எதிர்க்கட்சி பொறுப் புக்களை வகிக்க என்று முடியுமெனத் தெரிவித்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படக் கூடாதென எச்சரிக்கை விடுத்துள்ளாா்.