Breaking News

பாராளுமன்ற மோதல் ; அறிக்கை இன்று சாபாநாயகரிடம் சமா்ப்பிக்கத் தீர்மானம்.!

பாராளுமன்றத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக விசாரணை செய்ய நிய மிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையானது சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின் அதனை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்து அதில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடி க்கை தொடர்பிலும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடு தலை முன்னணி கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் மீது மேற்படி அறிக்கை யில் குற்றம் விவரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட அரசி யல் முரண்பாடுகளின் போது கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திக திகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் மோதல்களை அடுத்து நாட்டில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாராளுமன்ற வாரத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கிய மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கிய பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் எழுவர் கொண்ட பாராளுமன்ற விசா ரணைக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட் டுள்ளது.