Breaking News

மேல் மாகாண மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களை நியமித்தாா் மைத்திரி.!

மேல் மாகாண ஆளுநராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலியும் கிழக்கு, மாகாண ஆளுநராக எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ்வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றைய தினம் நியமிக்கப்பட் டுள்ளனா்.

மாகாண ஆளுநர்கள் அனைவரையும் உடனடியாக பதவி விலகுமாறு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 31ஆம் திகதி தெரிவித்துள்ளமைக்க மைவாக அதற்கமைய மறுநாள் ஒன் பது மாகாண ஆளுநர்களும் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்துள்ளனா்.

அதன் பிரகாரம் புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது 9மாகாணங்களில் 05 மாகாணங்களுக்கான ஆளு நர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கையளித்துள்ளாா்.

அதனடிப்படையில் மேல் மாகாண ஆளுநராக இருந்த ஹேமகுமார நாணயக் காரவுக்குபதிலா அஸாத் சாலியும் மத்திய மாகாண ஆளுநராக இருந்த பீ.பி. திஸாநாயக்கவுக்கு பதிலாக மைத்திரி குணரத்னவும் கிழக்கு மாகாண ஆளு நராக இருந்த ராேஹித்த போகொல்லாகமவுக்கு பதிலாக

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் வட மத்திய மாகாண ஆளுநராக இருந்த எம்.பி. ஜயசிங்கவுக்கு பதிலாக சரத் ஏக்கநாயக்கவும் மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக இருந்த கே.சீ. லாகேஸ்வரனுக்கு பதிலாக பேஷல ஜயரத்ன பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாகாணங்களான தென், வடக்கு, சம்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங் களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை.