Breaking News

இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இதுவே சந்தர்ப்பம்.!

நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கும் இடையில் தேசிய ஐக்கியத்தை யும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் முதலில் இந்த நாட் டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருவதை அனைவரும் ஏற்க  வேண்டியது அவ சியமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்காக பல திட்டங்களை மேற் கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப் பிடும் அமைச்சர் மனோ எனினும் இதுவரை தனது அமைச்சுக்கான விடைய தானங்கள் ஒதுக்கப்படாத தால், அரச கரும மொழிகள் அமைச் சராக இன்னமும் தனது கடமைகளை ஆரம்பிக்கவில்லையெனத் தெரிவித் துள்ளாா்.

கொழும்பில் அமைந்துள் தபால் திணைக்களத்தின் தலைமையகத்தின் கேட் போர் கூடத்தில் “என்னை வரைதல்” எனும் நூல் வெளியீட்டு விழா தேசிய நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலை யில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன், சிறிலங்காவில் 19இனக் குழுக்கள் வாழ்வதனை, அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல வேண்டியது கல்விசார் சமூகத்தின் கடப்பாடு எனத் தெரிவித்துள்ளாா்.

எனினும் அரசியல் - சமூக ரீதியாக இன அடையாளங்களை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு சிறிலங்கா பிரஜைகள் என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டியது அவசியம் என்றும் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

அரச கரும மொழிகள் அமைச்சினூடாக, கல்வியமைச்சினையும் மீறிச் சென்று மொழியின் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள் ளாா்.

 சிறிலங்கா என்பது பல்லின மக்கள் வாழும் நாடு எனும் புரிதலை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்துவதனூடாக நாட்டில் இனங்களுக்கிடையிலான தேசிய ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியுமென அமைச் சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளாா்.