Breaking News

இரு சரக்கு கப்பல்கள் தீக்கிரை ; 14 பேர் உயிரிழப்பு.!

கிரிமியாவின் கருங்கடல் கடற்பரப்பில் இரண்டு சரக்கு கப்பல்கள் தீப் பற்றி எரிந்ததில் 14 பேர் உயரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தன்சானியாவுக்கு சொந்தமான இர ண்டு சரக்கு கப்பல்களே இவ்வாறு தீப்பற்றி யுள்ளன. துருக்கி மற்றும் இந் தியாவைச் சேர்ந்த 17 கப்பல் பணி யாளர்களுடன் சென்றவொர் கப்பலும் 14 பேருடன் சென்ற மற்றுமோர் கப்ப லுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள் ளது.

எரிவாயுவை தாங்கிச் சென்ற ஒரு கப்பலில் ஏற்பட்ட தீ பரவாலானது மற் றைய கப்பலுக்கும் பரவியுள்ளது. எனினும் எரிபொருளை ஒரு கப்பலிலிருந்து மற்றுமொர் கப்பளுக்கு மாற்றிக் கொண்டபோதே தீ பற்றிக் கொண்டதாக ரஷ்யா கடற்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் தீ பரவியதும் இரு கப்பல்களிலும் பயணித்தோர் தம்மை காப் பாற்றிக் கொள்வதற்காக கடலில் குதித்ததாகவும் அவர்களில் 14 பேர் உயிரி ழந்ததாகவும், 12 பேர் காப்பற்றப்பட்டதாகவும், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனா்.