Breaking News

12 ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறும்.!

2019 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண் டுதோறும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வரு கின்றது. இதுவரை 11 தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந் துள்ளன. இந் நிலையில் 12 ஆவது ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

ஆனால் இந்தியாவின் பொதுத் தேர்தல் காரணமாக இத் தொடரானது தென்னா பிரிக்காவுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் இம் முறை இந் தியாவிலேயே ஐ.பி.எல். தொடரை நடத்த பி.சி.சி.ஐ முயற்சித்துள்ளனா்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலை வரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளனா்.

பேச்சு வார்த்தையில் ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐ.பி.எல். தொடர் தென் ஆபிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப் பட்டுள்ளது.