Breaking News

பாதுகாப்பில் சந்தேகம் ஏற்பட்டால் வெசக்கிற்கு பின்னரே கத்தோலிக்க பாடசாலைகள் திறக்கப்படும்

பாதுகாப்பு படைகளின் தொடர் தேடுதல் நடவடிக்கைகளில் மீட்கப்படும் வாள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் நாட்டில் பாதுகாப்பு குறித்து சந்தேகங்களையே ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலை தொடருமாயின் வெசக் முடிந்த பின்னரே கத்தோலிக்க பாட சாலைகள் ஆரம்பமாகுமென பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சற்று முன்னர் நடை பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.