Breaking News

அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்களே - கரு

நாட்டின் சட்­டத்தை அனை­வரும் பின்­பற்றி செயற்­பட வேண்டும் என்றும் தற்­போது நாட்டில் இயங்கி வரு­கின்ற அடிப்­ப­டை­வாத கல்வி செயற்­பா­டுகள், சிறு வர் உரி­மை­களை மீறு­வ­தான இள­வ­யது திரு­ம­ண­முறை போன்ற விட­யங்கள் குறித்து பாரா­ளு­மன்றம் விரைவில் நடவடிக்­கை­களை மேற்­கொள்ளும் என சபா­நாயகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

திறைசே­ரியின் கேட்போர்கூடத்தில் இடம்­பெற்ற டீ.பீ. ஜய­தி­லக நினைவு தின நிகழ்வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே  இவ்­வாறு தெரிவித்துள்ளாா்.

 மேலும் கூறி­ய­தா­வது,



அடிப்­ப­டை­வாதப் போக்கைக்கொண்ட முஸ்­லிம்கள் சிலரால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில், அனைத்து முஸ்லிம் மக்­க­ளையும் எதி­ரி­க­ளாக பார்ப்­பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படைவாதத்­திற்கு எதி­ராக எம்­முடன் இணைந்து செயற்­பட ஏனைய அனைத்து முஸ்­லிம்­களும் தயா­ரா­கவே உள்­ளனர்.

அதே­வேளை இலங்­கைக்கு பொருத்­த­மற்ற புர்கா ஆடையைத் தடை செய்­வது குறித்தும் முஸ்­லிம்­களும் தொடர்ந்தும் வலியுறுத்தித்தான் வரு­கின்­றனர். நாட்டின் சுதந்­திர போராட்­டங்­களின்போது டீ. பீ.ஜய­தி­லக, டீ.எஸ். சேனா­நா­யக்க ஆகி­யோர்­க­ளுடன் இணைந்து நாட்­டுக்­காக முஸ்லிம் தலை­வர்­களும் செயற்­பட்­டனர் என்­பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தற்­போதும் பயங்­க­ர­வா­தி­களை ஒழிப்­ப­தற்­காக அடிப்படைவாதிகள் சிலரை தவிர ஏனைய அனைத்து முஸ்லிம் மக்­களும் முன்­வந்­துள்­ளனர். நாட்டின் சுமு­க­மான நிலை­மைக்கு பங்கம் விளை­விக்கும் வகையில் நாட்­டுக்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளி­னாலே இன்று நாடு பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது.

பௌத்த சமயம் ஒருபோதும் இன மற்றும் மத பேதங்­களை போதிக்கவில்லை. சில அடிப்ப­டை­வாத முஸ்­லிம்களால் மேற்­கொள்­ள­ப்படும் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­வது முஸ்லிம் மக்­களே.மற்றும் அடிப்­ப­டை­வாத கல்வி முறை, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் குறித்தும் பாராளுமன்றில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்.