Breaking News

அனைத்து தரப்பினர்களும் இணைந்து செயற்படுங்கள் - ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

இலங்­கையில் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்து கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்றேன். எனினும் அதன்­ பின்னர் முஸ்லிம் மக்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் சில மதத்­த­லை­வர்­களின் வன்­மு­றை­களை அங்­கீ­க­ரிக்கும் வகை­யி­லான கருத்­துக்கள் தொடர்­பி­லான அறிக்­கைகள் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் தெரி­வித்துள்ளாா். 

பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக சில­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் அவ­ச­ர­கால சட்­ட­மா­னது மிகவும் குறை­வான காலப்­ப­கு­திக்கு மட்­டுமே அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச் லெட் தெரிவித்துள்ளாா்.

ஜெனி­வாவில் நேற்று ஆரம்­ப­மான ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 41 ஆவது கூட்டத் தொடரை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் இதனைக் குறிப்­பிட்டார். நீண்ட அறிக்­கையை நேற்று பேர­வையில் வாசித்த மனித உரிமை ஆணை­யாளர் பல்­வேறு நாடுகள் குறித்து பிரஸ்­தா­பித்­த­துடன் இலங்கை குறித்தும் தனது நிலைப்­பாட்டை வெ ளியிட்டார்.

 மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் அந்த நாட்டில் பதற்­றத்தை அதி­க­ரித்­தமை தொடர்பில் நான் கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்றேன். ஜனா­தி­ப­திக்கும் அர­சாங்­கத்­திற்­கு­மி­டை­யி­லான ஒன்­றி­ணைந்த அணு­கு­மு­றையின் பல­வீ­ன­மான தன்­மையே பாது­காப்புத் தரப்­பினர் அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் பாது­காப்பை வழங்கும் செயற்­பாட்டில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக சில முக்­கிய மனித உரிமை விட­யங்­களில் இவ்­வாறு மோச­மான பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் மற்றும் சில மதத்­த­லை­வர்­களின் வன்­மு­றை­களை ஊக்­கு­விக்கும் கருத்­துக்கள் என்­பன என்னை கவ­லை­கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றன.

இந்த விடயம் சரி­யான முறையில் கையா­ளப்­ப­ட­வேண்டும். பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக சில­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் அவ­ச­ர­கால சட்­ட­மா­னது மிகவும் குறை­வான காலப்­ப­கு­திக்கே அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

அத்­துடன் அர­சியல், மதத்­த­லை­வர்­க­ளையும் சமூ­கத்­த­லை­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து வன்­மு­றைகள் மற்றும் அநீ­திகள் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள நிலை­மை­களை ஆராய்­வதே இங்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. அனைத்­து­வ­கை­யான வன்­மு­றைகள் மற்றும் அநீ­திகள் தொடர்பில் அர­சியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆராயவேண்டியது அவசிய மாகும்.

இந்த விடயத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் மிக முக்கிய மற்றும் ஊக்குவிக்கத் தக்க வகையிலான வேலைத்திட்டங்க ளுக்கு எனது முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள் கின்றேன் என்றார்.