Breaking News

சிறைக் கைதி தற்கொலை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று அதிகாலை சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள மலசல கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

திவுலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பாக குறித்த கைதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் திவுப லப்பிட்டிய தடுப்புக்காவலில் வைக் கப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே அவர் இவ்வாறு துக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடதெனியாவை சேர்ந்த கொடிகாபத்தல கெதர நாலாக பிரசன்ன குமார (வயது 40) என்ற நபரே இவ் வாறு தற்கொலை செய்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.