Breaking News

நாளை மீண்டும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு கூடவுள்ளது.!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாரா ளுமன்ற விசேட தெரிவிக்குழு முன் னிலையில் ஆஜராகுமாறு காத்தான் குடி பொலிஸ் நிலைய பொறுப்பதி காரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோ ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள விசேட தெரிவுக்குழு அமர்விற்கு மேலும் ஒரு அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசேட தெரிவுக்குழுவின் அமர்வு நடை பெறவுள்ளது. பிற்பகல் 02 மணியளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரி வித்துள்ளாா்.

தம்மிடம் கேட்டுக் கொண்டதற்கினங்க மேலும் ஒரு அமைப்புக்கும் சாட்சி யங்களை பதிவு செய்வதற்கு அவகாசமளிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயக ரும் ஏப்ரல் 21தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளு மன்ற விசேட தெரிவிக்குழுவின் தலவைருமான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளாா்.

பகிரங்கமாக தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம் பெறும் என தெரிவித்த பிரதி சபாநாயகர் சிலவேளை இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படுவ தற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அதனை தெரிவுக் குழுவே தீர்மா னிக்கும் என்று மேலும் தெரிவித்துள்ளாா்.

அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சைகள் இல்லை என தெரிவித்த தெரிவிக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அதிகாரிகள் அழைக்கப்படுவதற்காக பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இது தொடர் பில் எதிர்காலத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித் துள்ளாா்.