Breaking News

கிளிநொச்சி ரயில் விபத்து: சமிக்ஞை கட்டமைப்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பம்.!

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் விபத்து நடைபெற்ற பகுதியில், பொருத் தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் சமிக்ஞைப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விபத்து நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த சமிக்ஞை கட்டமைப்பு செய லிழந்திருந்ததாக எழுந்துள்ள குற்றச் சாட்டின் அடிப்படையில் இந்த விசா ரணைகள் முன்னெடுக்கப்பட்டுள் ளன.

விபத்தின் போது, குறித்த சமிக்ஞை கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகி ன்றனர். ரயில் கடவையில் பொருத்தப்பட்டிருந்த சமிக்ஞை கட்டமைப்பு செய லிழந்திருந்ததாக பெரும்பாலான பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – முறிகண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் நடைபெற்ற விபத்தில் 6 இரா ணுவச் சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் ஒருவர் யாழ். போதனா வைத் தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.