கிளிநொச்சியில் ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்து; ஐவர் உயிரிழப்பு
கிளிநொச்சி – காளிகோயில் 55ஆம் கட்டை பகுதியில் ரயில்வே கடவையில் இராணுவத்தினர் பயணித்த லொறியொன்று கடுகதி ரயிலுடன் மோதி விபத் துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (25ஆம் திகதி) பிற்பகல் 1.45 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள் ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான லொறியில் 4 இராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.