Breaking News

கிளிநொச்சியில் ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்து; ஐவர் உயிரிழப்பு

கிளிநொச்சி – காளிகோயில் 55ஆம் கட்டை பகுதியில் ரயில்வே கடவையில் இராணுவத்தினர் பயணித்த லொறியொன்று கடுகதி ரயிலுடன் மோதி விபத் துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந் துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள் ளனர். இதன்போது காயமடைந்தவர் கள் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

இன்று (25ஆம் திகதி) பிற்பகல் 1.45 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள் ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான லொறியில் 4 இராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.