வரலாற்றுத் தவறினை தமிழ் மக்கள் இனியும் இழைத்துவிடக்கூடாது - விஜயகலா

யாழ்ப்பாணம் யாழ்.மாநகர சபை மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற சமுர்த்தி நிவாரண உரித்து பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் உள்நாட்டு போரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் வரை தமிழ் மக்களே கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கையில் எத்தனையோ சமூகம் வாழ்கின்ற போதிலும் இன்றுவரை தமிழர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் இடம்பெற்ற போரினால் தமிழர்கள் உடமைகளை இழந்தனர் அதற்கு மேலாக பல உறவுகளை இழந்துள்ளனர்.
தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது சில நிர்ப்பந்தத்தினால் வாக்களிக்காது விட்டனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்தது.இதனால் நாட்டில் உள்நாட்டு போர் உக்கிரம் அடைந்தது. முள்ளிவாய்க்கால் இறுதி போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
இதே வரலாற்று தவறினை இனியும் தமிழ் மக்கள் செய்யக் கூடாது. எனவே இனி வரும் தேர்தலில் சரியான தெரிவினை மேற்கொண்டு முழுநாட்டுக்கு மான தேசிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டுமெனத் தெரிவித் துள்ளாா்.
இந்த நாட்டில் உள்நாட்டு போரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் வரை தமிழ் மக்களே கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கையில் எத்தனையோ சமூகம் வாழ்கின்ற போதிலும் இன்றுவரை தமிழர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் இடம்பெற்ற போரினால் தமிழர்கள் உடமைகளை இழந்தனர் அதற்கு மேலாக பல உறவுகளை இழந்துள்ளனர்.
தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது சில நிர்ப்பந்தத்தினால் வாக்களிக்காது விட்டனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்தது.இதனால் நாட்டில் உள்நாட்டு போர் உக்கிரம் அடைந்தது. முள்ளிவாய்க்கால் இறுதி போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
இதே வரலாற்று தவறினை இனியும் தமிழ் மக்கள் செய்யக் கூடாது. எனவே இனி வரும் தேர்தலில் சரியான தெரிவினை மேற்கொண்டு முழுநாட்டுக்கு மான தேசிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டுமெனத் தெரிவித் துள்ளாா்.