Breaking News

அமெரிக்கா இலங்கையிடம் தொடர்ந்தும் வலியுறுத்தவுள்ள விடயங்கள் என்ன?

மனித உரிமைகளை மதிக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தும் என அமெரிக்காவின் தென்னாசிய மத்திய ஆசிய விவகாரங்களிற்கான முதன் பிரதி உதவி செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை யின் ஆசிய பசுபிக்கிற்கான வெளி விவகார குழுவிற்கு சமர்ப்பித்துள்ள எழுத்துமூல அறிக்கையில் தெரிவித் துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்கு தல்கள் குறித்த விசாரணைகளில் இலங்கையுடன் அமெரிக்கா தோளோடுதோள் நிற்கின்றது என தெரிவித்துள்ள அவர் இலங்கை யின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் திறனை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா உதவுகின்றது எனத் தெரிவித் துள்ளாா்.

சர்வதேச பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இலங் கைக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவ தாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறுபான்மையினத்தவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்கள் அகதி கள் உட்பட அனைவரினதும் மனித உரிமைகளிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை தேசிய தேர்தல்களிற்குள் நுழையும் இந்த தருணத்தில் இலங் கையை நல்லிணக்கம், நீதி பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் முன்னேற் றத்தை காண்பிக்குமாறு அமெரிக்கா தொடர்ந்தும் வற்புறுத்தும் என அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.