Breaking News

விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மீது குற்றச்சாட்டு - சித்தார்த்தன் எம்.பி

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளு மன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா். 

முன்னாள் முதலமைச்சர் விக்கி னேஸ்வரன் தலையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார்.

அதன்பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்ட ணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை.

தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட் டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந் தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப்பாடு உள்ளது.

அந்த மாற்றைக் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த கூட்டு உருவாகுமா என்ற கேள்வி இருக்கின்றது. அப்படியொரு பலமான கூட்டு உருவாகுமாக இருந் தால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பலமான ஜனநாயக ரீதி யான போட்டியாக அமையும். அதை அவர்கள் செய்வார்களா என்பது கேள் வியே? எனத் தெரிவித்துள்ளாா்.