Breaking News

மாணவா்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை

பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (முத லாம் திகதி) வழங்கப்படவுள்ளது.

இதன்படி, அரச தமிழ், சிங்கள பாட சாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு நேற்று (30) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை இத் தடை அமு லில் இருக்கும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைய பரீட்சைகள் நடைபெற வுள்ளன. அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் நடாத்தப்படும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 4 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.