Breaking News

தபால் மூல வாக்களிப்பிற்காக 13 ஆம் திகதி விஷேட தினமாக பிரகடனம்!


தபால் மூல வாக்களிப்பிற்காக ஜூலை 13 ஆம் திகதி விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.