Breaking News

உலக கிண்ணத்தை இலங்கை வென்ற போது பிரபாகரனும் கொண்டாடினார் - ஹிருணிகா.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஈட்டித்தந்துள்ள கௌரவத்தை எந்தவொரு அரசியல்வாதியும் இலங்கைக்கு ஈட்டித்தரவில்லை. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.


பிரபாகரன் கூட கிரிக்கெட்விளையாட்டினை நேசித்தார். 1996 ஆம் ஆண்டு இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றபோது வானத்தை நோக்கி சுட்டு அந்த வெற்றியை கொண்டாடியிருந்தார்.

எனினும் அமைச்சர் மகிந்தானந்தவின் கருத்து பாரதூரமானது. குளவிக்கூட்டுக்கு கல்லெறிவதைப் போன்ற செயற்பாடு என ரெரிவித்துள்ளார்.

2011 ஆண்டு இறுதி போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான மஹேல ஜயவர்த்தன , சங்கக்கார போன்றவர்களின் முகத்தில் தெரிந்த சோகம் போட்டியினை கண்டுகளித்தவர்களே அறிவர் .

இன்று உலக அரங்கில் இலங்கைக்கு இருக்கும் கௌரவத்தை மஹிந்தவோ, மஹிந்தானந்தவோ ஈட்டித்தரவில்லை என தெரிவித்த அவர் அந்த கௌரவம் இலங்கை கிரிக்கெட் வீரர்களாலேயே ஈட்டித்தரப்பட்டது என்றார்.