Breaking News

உடல்நிலை சரியில்லாததால் சிஐடியில் முன்னிலையாக முடியவில்லை! - கருணா

தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக முடியவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

தனது வழக்கறிஞர்கள் ஊடாக அவர் இதனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். மேலும் தனது உடல்நிலை சரியானதும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுத்தருவதாகவும் அவர் தனது வழங்கறிஞர்கள் மூலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைவாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இரு சி ஐ டி குழுக்கள் கிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது அவரிடம் விசாரணைகளை முனேடுப்பதற்க்காக.

அம்பாறை பிரதேசத்தில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நேற்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவருக்கு அறிவித்திருந்தது. 

குறித்த அறிவிப்பு தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இதனுடன் தொடர்புடைய ஏனைய செய்திகள்