Breaking News

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2631 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1981 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போது, 639 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.