Breaking News

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்!

அரச நிறுவனங்களுக்கு தேவையான தளபாடங்களை உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அரச நிறுவனங்களுக்கு அறிவுறித்தியுள்ளார்.

பத்தரமுல்ல தலவத்துகொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ தளபாட உற்பத்தியாளர்கள் செய்த கோரிக்கைக்கு அமைய உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.