Breaking News

தேர்தலையிட்டு அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு!


எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 05 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே குறித்த இரு நாட்களும் நாடு பூராகவும் உள்ள சகல மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.